தானே கருத்து சொல்லி தானே எதிர்வினை எழுதி தானே அதை விமர்சித்து எல்லாம் தானே செய்துவருபவைதான் என்ற பூனைக் குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது. இனி எழுதுவதைக் கூடத் தானே படித்து இன்புறட்டும் என்று விட்டுவிடுவதுதான் சிறந்த தீர்வு என்று தோன்றுகிறது. பல சமயங்களில் சென்னைத் தெருக்களில் மன நிலை பிறழ்ந்த சிலரைப் பார்த்திருக்கிறேன். உரக்க பேசும் சத்தம் கேட்கும். திரும்பிப் பார்த்தால் தன்னுடன் தானே உரக்கப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஏதோ சுகமோ வடிகாலோ இருக்கக் கூடும் என்று கருதி அவர்களை தொல்லை செய்யாமல் போய்விடுவேன். சிலர் அப்படிப் பேசாமல், கல்லையோ கையில் கிடைத்த எதையோ எடுத்து நம் மீது வீசும்போதுதான், தற்காப்புக்கு மருத்துவர் உதவியையோ மற்றவர் உதவியையோ நாடவேண்டியதாகிறது. மற்றபடி தனக்குத் தானே ஒருத்தர் பல விதமாக மிமிக்ரி பேசி சுய இன்பம் அடைந்தால் அடைந்துவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன..
Posted on: Mon, 04 Nov 2013 09:20:53 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015