* " நீ நீயாகவே வாழ்ந்து - TopicsExpress



          

* " நீ நீயாகவே வாழ்ந்து விட்டுப் போ...!!! - " எவரினதும் தூண்டுதலின் பேரில் உன்னை மாற்றிக் கொள்ள முயலாதே...!!! " சரியோ தவறோ நீ நீயாகவே வாழ்ந்து விட்டுப் போ...!!! " பிறர் ஒருவர் உனக்காக தன்னை மாற்றிக் கொள்ள நினைத்தால் நல்லது...!!! " இருந்தும் கொஞ்சம் எச்சரிக்கை கொள்...!!! " ஏனெனில் சில சமயம் அதில் விஷம் இருக்கலாம்...!!! " நீ நீயாகவே வாழ்ந்து விட்டுப் போ...!!! * " இழப்புகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை...!!! " தோல்விகள் இல்லாத மனங்களும் இல்லை...!!! " கிடைத்த சந்தோசம் தொடராவிட்டாலும், வரும் கவலையை தகர்த்து எறிந்து விடுங்கள்...!!! - பா உ . பாலா * " தோல்விகள் எனக்கு புதிதல்ல...!!! - " நான் தொலை தூரம் நடந்து விட்டேன்...!!! " தளராமல் என்னோடு என்னைப் போல நடைபோடும் இதுவரை என்னை பிரியாத ஒரு உறவு என் நிழல்...!!! " எத்தனை முறை தான் நான் விழுவது??? " எத்தனை முறை தான் நான் எழுவது??? " அதை பார்த்து நான் அழுதும் விட்டேன்...!!! " அதை பார்த்து நான் சிரித்தும் விட்டேன்...!!! " என்றாலும் எதை தான் பார்க்கிறது என்னிடம்??? " எழுவேன் நான் மறுபடியும் ஏனென்றால் தோற்பது எனக்கு புதிதல்ல...!!! " தோல்விகள் எனக்கு புதிதல்ல...!!! * " ஒரு சிலர் எனக்கு அறிவுரை செய்தனர்...!!! " பலர் என்னை சோதித்தனர்...!!! " பலர் என் மீது போலியாய் அன்பு செலுத்தினர்...!!! " பலர் என்மூலம் காரியம் சாதித்தனர்...!!! " பலர் எனக்கு பாடம் கற்பித்தனர்...!!! " பலர் எனக்கு இந்த உலகை காட்சிப்படுத்தினர்...!!! " இத்தனை அனுபவத்திலும் நான் கலங்கியிருந்த போது எனக்காக உன்னை பகிர்ந்துகொண்டவள் நீ மட்டுமே...!!! * " நேற்று என்னிடம் எதுவும் இல்லை விலகிப் போனார்கள்...!!! " இன்று என்னிடம் எல்லாம் உண்டு ஓடி வருகிறார்கள்...!!! " இப்போது விலகி போகிறேன் நான்...!!! * " பணம்...!!! - " பணம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இல்லை என்பார்கள் அது பொய் என்பேன் உன்னிடம் நல்ல குணம் இருக்கின்றது ஆனால் என்னை புரிந்து கொள்ளும் மனம் தான் இல்லை...!!! " பணம்...!!! - பா உ . பாலா * " மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல...!!! " தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை...!!! * " பிரச்சனை என்ற கர்பத்திற்குள் தான் தீர்வு என்ற குழந்தை இருக்கின்றது...!!! * " நம்மை விரும்பும் ஒருவர் நம்மோடு இல்லாத போதுதான் புரியும் அவரின் அருமையும் பிரிவின் கொடுமையும்...!!! * " கடவுள் பக்தியும் கள்ளப் புத்தியும் உள்ளவர்களே இன்றைய உலகில் சிறப்பாக வாழ்கின்றார்கள்...!!! * " ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்...!!! * " மீட்கலாம்...!!! " மீட்கலாம்...!!! " என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறேன் அடைவு...!!! * " நம்பி கை வை அதுதான் வாழ்க்கை விடியும் என்ற நம்பிக் கையில் உள்ளதை அடைவு வைக்கின்றோம்...!!! " உண்மை யதார்த்தம் இதுதானே...!!! * " உண்மையான அன்பிற்கு ஏமாற்ரத் தெரியாது, ஏமாரத் தான் தெரியும் "...!!! - பா உ . பாலா * " உண்மையான அன்பை புரிந்து கொள்ளத் தான் இயற்கை எம்மை சில நேரங்களில் தனிமைப்படுத்துகின்றது - பிரிக்கின்றது "...!!! "அந்த நிமிடங்களில் மனதில் தோன்றும் சில வலிகளையும், துன்பங்களையும் போக்கும் உண்மையான அன்பானவரின் நினைவுகள் வந்து தாலாட்டும் தருணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் நாம் பிறந்த நாட்களில் உணராத காணாத சில புன்னகைகள் எம்மை அறியாமல் உதடுகளை தாலாட்டும் போது ஒரு முறை அல்லா ஓராயிரம் முறை தோற்றுப் போனாலும் - நான் அனாதையாக மாட்டேன் "...!!! * " உயிர் போகும் கஷ்டத்திலும் மற்றவரிடம் கையேந்தாதீர்கள், கையேந்தினால் எம் இலட்சியமும், கௌரவமும், சுதந்திரமும் மற்றவரிடம் போய் விடும் "...!!! * " உயிர் போகும் துன்பத்திலும் எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் "...!!! " எதிர்பார்த்தால் இறுதிவரை நீங்கள் எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள் "...!!! * " உதவ நினைப்பவன் உள்ளத்துக்குள் குமுறுகின்றான்...!!! " இருப்பவனுக்கு கொடுக்கும் மனது இருக்காது...!!! " கொடுக்கும் மனது இருப்பவனுக்கு இருப்பு இருக்காது...!!! " உரத்துப் பேசுபவன் தன் உயிரையே இழக்கின்றான்...!!! " பல நேரங்களில் உரத்து பேச முடிவதில்லை, தான் பேச நினைத்தால் பல பிரச்சினைகள்...!!! "இது தான் இந்த உலகம்"...!!! * " இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை...!!! " இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை...!!! - பா உ . பாலா * " வசதிகள் இல்லையேல் உறவுகள் மாயம் தான்...! " யாரைக் கேட்டு இங்கே சொந்தம் உருவானது.?...! " உறவுகள் எந்நாளுமே நிலையில்லாததே....!!! * " ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது...!!! " ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்...!!! * " பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை...!!! * " பணம் பணம் எனும் கொடிய பசியில் தினம் தினம் ஓடுகிறான் மனிதன்...! " நிறம் மாறும் அழகிய உலகில் உண்மையான மனிதன் இல்லை...!!! * " கனவுகள் எல்லாம் நிஜமாகும் ஒரு நாள்...!!! " நிறைய வலிகளுக்கு பிறகு...!!! * " ரணங்களோடுதான் தினம் தினம் வாழ்க்கையென்றால் பிணமாகிப் போவதே சிறந்தது...!!! * " நிழல்கள் அழகாய்த்தான் இருக்கின்றன நிஜங்கள் வெளித்தெரிகின்ற வரையில்...!!! * " கதையோடு கலந்திருந்தால் பேச்சோடு விட்டிருப்பேன் ....!!! " கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன்...!!! " இதயத்தோடு கலந்திருப்பதால் என் உயிரோடு நீ கலந்ததால் என் மூச்சோடு கலந்திருப்பதால் உன்னை பிரிவது எப்படி?...!!! - பா உ . பாலா * " மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கடவுளால் தண்டனை கொடுக்க முடியுமென்றால் கடவுள்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கொடுப்பது யார்.? " இரக்கமே இல்லாமல் இரக்க வைத்து இறக்க வைத்து இப்படி இல்லாமையை உணர்த்தி உணர்த்தி தினம் தினம் உயிர் பறிக்கும் கடவுளை நான் எப்படித் தண்டிப்பது......!!! * " தவறு செய்வது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது நானாகவே இருக்கிறேன்.....!!! * " நமக்குப் பிடித்தவர்களின் மேல் நாம் வைக்கின்ற நம்பிக்கைகள் தகர்த்தெறியப்படும் சிறு நொடியில் தான் நாளைய பொழுதுகளின் மீதும் நம்பிக்கையிழக்கிறது மனம்.....!!! * " உழைத்துப் பிழைப்பவன் தான் இனிய வாழ்க்கையத் தேடுகின்றான் "...!!! * " பிறரில் தேடுபவன் தன்னை தொலைகின்றான்...!!! " தன்னில் தேடுபவன் அதில் பிறரையும் சரியாகக் கண்டு கொள்கிறான்...!!! * " விதி எனச் சொல்பவன் வாழும்போதே இறக்கின்றான்...!!! " மதி கொண்டு வாழ்பவன் இறந்தபின்னும் வாழ்கின்றான்...!!! " தாமாக ஏதும் செய்து விட்டு இல்லை தவறு செய்து விட்டு விதிமேல் பழிபோட்டு தப்பிக்கும் மனிதர்களும் இருக்கின்றார்கள்...!!! " இவர்கள் இருக்கும் போதே இறந்ததுக்கு சமம்...!!! உண்மைக்கு இலக்கனமாக வாழ்பவர்கள் இறந்த பின்னும் வாழ்கின்றார்கள்...!!! " அவர்கள் வாழ்ந்த்திற்கான அடையாளம் இறந்த பின்னும் அவர்கள் பெருமையை நாம் பேசுபோது அவர்களுக்கு கிடைக்கின்றது...!!! - பா உ . பாலா * " இதயத்தின் சுவர்களில் இறங்கிய மரணமே...!!! – " ஏன் வாழும் இடைவெளி தந்து விலகி நீ போகிறாய் விலங்கிட்ட கரங்களில் - விடுதலையை தந்திருந்தால் அன்னை மண் மீதிலே – தலை சாய்த்து மாய்ந்திருப்பேன்...!!! * " எனது பலவீனம் எனக்குத் தெரியும்...!!! " அதுதான் என் பலம் "...!!! * " மீனுக்குக்கூடத் தொல்லை வராது - அதுதன் வாயை மூடிக் கொண்டிருந்தால் "...!!! * " அம்மா என்ற ஒரு உறவு இல்லா விட்டால் இந்த உலகம் அநாதை தான் - நாமும் அநாதை தான் "...!!! * " நான் அடிக்கடி தலைய் சாய்த்து உறங்க மடி தந்தவள் ஒரே அடியாக உறங்கினாள் "...!!! * " அம்மா உன் அன்பு முத்தத்திலே என்றும் ஆயுசு நூறுதான் எனக்கு "...!!! * " பிறந்த பின்பு கருவறைக்கு செல்ல முடியுமா?...!!! " கருவறைக்கு மதிப்புத் தருபவர்கள் கல்லறை வரையில் போற்றப்படுவார்கள் "...!!! - பா உ . பாலா * " சொர்க்கமும் நரகமும் நம் கையில் தான் அதை தெரிவு செய்யும் ஒரு நொடிப் பொழுது தான் தீர்மானிக்கின்றது நம் எதிர் காலத்தை "...!!! * " மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள் நம்மை ஏமாற்றியவர்களை...!!! " ஏன் என்றால் ஒரு நேரத்தில் அவர்களை நாம் நேசித்திருப்போம் "...!!! * " நான் ரசித்த அழகிய வரிகள் ஆழ்மனம் மீறியே மிதந்திடும் உன் முகம் ஆயிரம் பிரசவத் தாய் - தாய் ரணம் என்னிடம் "...!!! * " பயணத்தின் தூரம் புரிவதில்லை மனதிலே பாரம் இல்லாதவரை நேரமும் தூரமும் தெரிவதில்லை "...!!! * " சிறிய நெருப்பை ஊதி அணைக்கின்ற காற்றுத்தான் பெரிய நெருப்பை ஊதி வளர்க்கிறது "...!!! * " தங்கள் குறைகளை உணராமல், பிறரது குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுபவர்கள் முட்டாள்கள் "...!!! * " உன‌க்கு ஒரு நல்ல ந‌ண்ப‌ன் ‌நீயே, உன‌க்கு ஒரு பகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌த் த‌விர உன‌க்கு ஒரு பகைவனு‌ம் இ‌ல்லை, ஒரு ந‌ண்பனு‌ம் இ‌ல்லை "...!!! - பா உ . பாலா * " நாம் வாழும் காலம் எமக்கானது போராடுவோம் தொடர்ந்து "...!!! * "நன்றிக்கு நாய்...!!! "தந்திரத்திற்கு நரி...!!! "வீரத்திற்கு புலி...!!! "உழைப்புக்கு எறும்பு...!!! "ஒற்றுமைக்குக் காக்கை...!!! "எதற்கு மனிதன்?.?.?...!!! * " ஆயிரம் நாடுகளின் கோடி அழகு வந்தாலும் - எம் தமிழீழ அன்னை மண்ணின் அழகுக்கு ஈடாகுமா ?.?.? "...!!! * " நடந்து வந்த பாதைகளை திரும்பிப்பார், கடந்து சென்ற உபதைகளையும் திரும்பிப்பார், கடக்கின்ற பதாதைகளை திரும்பிப்பார், இருக்கின்ற தமிழீழச் சொந்தங்களையும் திரும்பிப்பார், வெந்த சோற்றினை விரும்பிப்பார், சொந்த பந்தங்களையும் விரும்பிப்பார், எந்த வேற்றுமையும் இன்றிப்பார், ஏனிந்த தோல்வியென்று திரும்பிப்பார் "...!!! * " பணிந்து செல்வது பயந்து செல்வது அல்ல "...!!! " பணிவுக்கும் ஒரு தைரியம் வேண்டும் "...!!! " பணிவு ஒரு வரம் "...!!! * " துளைகள் இன்றி இனிய புல்லாங்குழல் இல்லை "...!!! " வலிகள் இன்றி நல்ல வாழ்க்கை இல்லை "...!!! * " உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான்...! " அல்லது இனி உன்னை ஏமாற்றப் போகின்றான் "...!!! * " மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கே கோபம் வரும் "...!!! * " நேற்று என்பது முடிந்து போனவையாக இருந்தாலும் அது தந்து விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாவலுக்கு ஒப்பானதாகும் "...!!! * " நீ முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும் "...! " நீ எழுந்து நட எரிமலையும் வழி கொடுக்கும் "...!!! * " மௌனத்தில் காட்டும் கோவமும் கோவத்தில் காட்டும் அன்பும் என்றும் தூய்மையானது "...!!! * " அர்த்தம் இல்லாத உங்கள் கோபங்கள் உங்களை நாளை அனாதையாக்கி விடும் "...!!! * " நல்ல சொற்கள் குளிர்ந்த தண்ணீரை விட மிக மிகக் குளிர்ச்சியானவை "...!!! - பா உ . பாலா * " புதைக்கப்படுவது தான் கல்லறை என்றால்...!!! " பல நினைவுகளை புதைத்து வைத்திருக்கும் என் இதயமும் "ஒரு கல்லறை" தான் "...!!! * " நீ நம்பிக்கையை விதை போடு ....! " முயற்சியை உரம் ஆக்கு ...! " வீண் போகாது எதுவும் ...! "விளைவதெல்லாம் வெற்றியாகும் "...!!! * " மரணம் டிக் டிக் கடிகார ஓசை...! " காலக்குறைப்பின் கணக்கு...! " கடைசி பொறுபேற்றில் ஒரு ஒற்றுமை "...!!! * " மனதை அடக்கினால் தியானம்...! " மனம் போல் ஆடினால் மயானம் "...!!! * " பூரணமானது எம்மை வந்து அடையும் போது குறைவானது எம்மை விட்டுச் சென்று விடும் " ..!!! * " ஒருவர் தம்முடைய அன்பை எவ்வகையிலும் மறைக்க முடியாது...! " துயரத்தில் இருப்பவர்களுக்காக அவர்கள் சிந்தும் கண்ணீரே அவரது அன்பை வெளிப்படுத்தி விடும்...!!! * " மூச்சு விட்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லை...!!! " அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தான் உன்மையான மனிதர்கள்...!!! * " எட்டிப் பிடிக்க முயன்றாலும் உடைந்தது போகிறது. . !!! " நிறைவேறாத ஆசைகள் நீர் குமிழிகளைப் போல்...!!! - பா உ . பாலா * " பெண்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் அவர்களும் உயிர் உள்ள மனசு உள்ள மனிதர்களே என்பதை மறவாதீர்கள் ..!!! " அதைப் போன்றே பெண்களும் ஆண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்...!!! " அதுவே மீண்டும் எங்களிடம் திருப்பி வரும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்...!!! * " பூவின் மணம் அறிந்தவர்களே...! " பெண்ணின் மனம் புரிந்ததுண்டோ? " மலரை பறிக்க யோசிப்பவர்களே...! " பூவையின் நெஞ்சை மிதிப்பது ஏனோ? " சாதிக்கப் பிறந்தவளை தடைபோடுவது ஏனோ?...!!! * " மனம் கொன்று உயிர் சுவைக்கும் மானிடப் பிறப்புக்களே...! " மனிதம் இன்னும் இங்கே இருக்கிறதா.?...!!! " இல்லை இறந்துவிட்டதா.?...!!! " மலரினும் மெல்லிய மனம் கசக்க உன்னால் முடியுமென்றால் நீ மனிதனே இல்லை..!!! " மரணித்த ஜடம் "...!!! * " சிரிக்கும் போது தான் வாழ்க்கையை ரசிக்க முடிகிறது...!!! " அழும் போது தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது "...!!! * " படுத்துக்கொண்டே சொர்க்கத்தை காணலாம் தலையணையில் அல்ல...!!! " தாயின் மடியிலும் - தந்தையின் தோளிலும் "...!!! * " வெற்றி எத்தனை சுகமான அனுபவமோ அதே போல தோல்வியும் ஒருவித அனுபவமே "...!!! * " ஒருவரை ஏமாற்றி விட்டேன் என சந்தொஷப்பட்டுக் கொள்ளாதே சில வேளைகளில் அவர் உன் மீது கொண்ட அன்பின் விட்டுக்கொடுப்பே அவரின் ஏமாற்றமாகவும் இருக்கலாம், நீ அவரை ஏமாற்றி விட்டேன் என நினைத்தால் முட்டாள் தனமான விஷயம் வேறு ஏதுமில்லை உனக்கு "...!!! * " கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான்...! " சாதாரண மனிதன் பிறரைக் குறை கூறுவான் "...!!! * " பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும் "...!!! * " உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப் படுத்தக் கூடாது "...!!! - பா உ . பாலா * " தமிழராக பிறந்து தமிழ் தெரியாது எனின் நீங்கள் தமிழும் அல்ல தமிழராகவும் மனிதராகவும் இருக்க தகுதி அற்றவர்கள் "...!!! * " தமிழ் அவமானம் இல்லை எங்கள் அடையாளம் "...!!! " தமிழர்கள் இடத்தில் தாய்த் தமிழில் பேசுவோம் "...!!! * " பிறந்து சிறந்த மொழிகளுக்கு மத்தியில் சிறந்து பிறந்த என் தாய்த் தமிழ் மொழியே...!!! " மீண்டும் நான் இறந்து பிறக்க நேர்ந்தால் உன்னை மறவாமல் இருக்க வரம் தருக என்னருமை தாய்த் தமிழ் மொழியே "...!!! - பா உ . பாலா * " தூய்மையில்லாத மனித ஜென்மங்கள் சுமத்தும் சில பழிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை வலிகளை ஏற்படுத்தி விடுகின்றன "...!!! * " பணத்திற்க்காய், சுய நலத்திற்காய் பாசத்தை விற்றுவிடாதிர்கள் நீங்கள் நல்ல மனிதராக (தமிழராக) இருந்தால் "...!!! * " ஆறாக ஓடும் தண்ணீருக்கு அழகு அதிகம்...!!! " அதுவே தேங்கி நின்றால் தாக்கம் அதிகம்...!!! * " மௌனம் மொழியாகும் பொழுது கண்ணீர் மட்டுமே வார்த்தைகளாகும் "...!!! * " பரிவோடு பிறந்த பாசம் உள்ளதில் மறையாது...!!! " பழிவாங்க பிறந்த பாசம் உள்ளத்தில் உறையாது "...!!! * " ஒரு புன்னகை கோபத்தை தற்காலிகமாக குறைக்கிறது, அன்பை நிரந்தரமாக விதைக்கிறது...!!! - பா உ . பாலா * " நல்லவனாய் இரு, ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே அதை விட முட்டாள் தனமான விஷயம் வேறு ஏதுமில்லை உனக்கு "...!!! * " என்மேல் பாசம் வைப்பவர்களை நான் வெறுக்கிறேன், சில நாட்கள் பாச மழையில் என்னை நனைய வைத்து விட்டு பல நாட்கள் கண்ணீரில் என்னை மூழ்க வைத்து விட்டுச் செல்வதால்...!!! * " உங்களை அலட்சிய படுத்தியவர்களை விட்டு விடுங்கள், உங்களை அசிங்க படுத்தியவர்களை மறந்து விடாதீர்கள் அவர்கள்களுக்கும் புரிய வைக்கும்படி வாழ்ந்து காட்டுங்கள் பொறுமையோடு...!!! * " நான் சிரித்த நாட்களை விட அழுத நாட்களே அதிகம்...!!! " சோகம் எனக்கொன்றும் புதிதல்ல...!!! " சோகம் மறக்கவே நான் சிரிக்க பழகிக் கொண்டேன்...!!! * " உயிர் போகும் கஷ்டத்திலும் மற்றவரிடம் கையேந்தாதீர்கள், கையேந்தினால் எம் இலட்சியமும், கௌரவமும், சுதந்திரமும் மற்றவரிடம் போய் விடும் "...!!! * " கஷ்டத்திலும் மற்றவரிடம் கையேந்தாதீர்கள் "...!!!" கஸ்டத்திலும் நேர்மையாய் இருங்கள் "...!!! " நீங்கள் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதீர்கள் "...!!! " உங்கள் வாழ் நாளிலே அதன் பயனை காண்பீர்கள் "...!!! * " மன்னிப்பு என்பதை பிறர் நமக்கு கொடுப்பதை விட நாம் பிறர்க்கு கொடுப்பதே சிறந்தது "...!!! - பா உ . பாலா * " நித்திரையில் இருக்கும் தமிழா கடலையூம் கடப்போம் வா "...! " வாழும் நாட்களின் நினைவூகளில் மகிழ்வூடன் சிறகடிக்க நினைக்கும் மனிதா பிறந்தோம் வாழ்ந்தோம் என இருக்க நாமொன்றும் எட்டு நாட்கள் வாழும் பட்டாம் பூச்சி அல்ல "...! " இறந்த பின்பும் வாழும் மானிட சாட்சிகள் நாம் "...! " பிரசவித்த வம்சத்தை விழுங்கும் ஐந்தறிவூ ஜீவன்களல்ல நாம் செயற்கை ஜீவன்களையே உருவாக்கும் புத்தி ஜீவன்கள் இன்னுமா புரியவில்லை நாம் யாரென்று.?.?.? " தமிழா சுடலை ஞானம் தேவையில்லை எமக்கு கடலையூம் கடப்போம் வா "...! - பா உ . பாலா * " பாசம் வேஷம் இல்லாதவரை மருந்து...!!! " அதுவே வேஷமானால் அதை விட கொடிய விஷம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை "...!!! * " நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் "...!!! * " நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் "...!!! * " நஞ்சுடனே ஒரு நாளும் பழக வேண்டாம் "...!!! * " நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் "...!!! * " அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் "...!!! * " அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் "...!!! * " உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே "...!!! - பா உ . பாலா * " நம்மை நேசிக்க சக மனிதர்களிடம் அன்பு மீதம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே விழித்து எழுந்தோம் "...!!! * " அதே எதிர் பார்ப்புடன் நம்மை எதிர் நோக்கும் சக மானிடர்கள் அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்துவோம் "...!!! - - பா உ . பாலா * " வாழ்க்கையில் நாம் சந்தித்த ஏமாற்றங்களும், அவமானங்களும், துரோகங்களும் "...!!! " நம்முடைய பலத்தை நாமே தெரிந்து கொள்ள உதவும் "...!!! - பா உ . பாலா * " பழகிப் பார் பாசம் புரியும் "...!!! " பகைத்துப் பார் வீரம் தெரியும் "...!!! - பா உ . பாலா * " மீண்டும் சந்திப்போம் அது வரை இனிய வணக்கங்கள் எல்லோருக்கும் "...! - " நன்றி, வணக்கம், என்றும் நட்புடன் உங்களுடன் "...! - பா உ . பாலா ( யாழ் / நல்லூர் பா உ . பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ் ) * - Web Site : - facebook/balasingam.balakrishnan - youtube/BALAKRISHNAN87 - youtube/BALASINGAM87100 - youtube/uthayam87 - facebook/balasingam.balakrishnan - dailymotion/Eelam-Yaal-Nallur-B-Bala - https://vimeo/user12779169/videos - https://vimeo/user12779169/ - myspace/tamileelambalakrishnan87 - pulse.yahoo/y - pulse.yahoo/BALASINGAMBALAKRISHNAN * Google + : Balasingam Balakrishnan * " எம் தமிழீழ தேசத்தின் விடுதலைப் பாடல்கள், சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், நினைவலைகள், மற்றும் கவிதைகள் - எமது அமைப்பின் (தமிழீழ விடுதலைப் புலிகளின்) தாயக விடுதலைப் பாடல்கள், தமிழீழத்தின் சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், வீரவணக்க நினைவலைகள், மற்றும் புரச்சிக் கவிதைகள் : ஏம்பி-3 (Audio & Mp-3) வடிவில் கேட்ப்பதற்கு : - https://soundcloud/tamil-eelam * " தமிழீழ தேசிய வானொலி - புலிகளின் குரல் வானொலி : - pulikalinkural/ * " சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், நினைவலைகள், கவிதைகள், உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், மற்றும் தமிழ் திரைப் பாடல்கள் : - https://facebook/B.Bala87280Fr - dailymotion/b-u-bala - youtube/UTHAYAM87 - HTTP://TWITTER.COM/BALA87FR - https://twitter/JaffnaBALA - Orkut: Balasingam Balakrishnan * Google + : Balasingam Sathasivam https://plus.google/115095728831266795866 * வீரவேங்கைகள்.கொம் -> முழுமையான மாவீரர் தளம். ( வீரச்சாவடைந்த எமது மாவீரர்களின் விபரங்கள் ): - veeravengaikal/ * பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் பார்வையிட : * Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட : BALAKRISHNAN87 BALASINGAM87100 UTHAYAM87 * Freebox இல் facebook ஜ பார்வையிட : facebook/balasingam.balakrishnan https://facebook/B.Bala87280Fr * Freebox இல் Dailymotion ஜ பார்வையிட : Eelam-Yaal-Nallur-B-Bala B-U-Bala * Freebox இல் Vimeo ஜ பார்வையிட : https://vimeo/user12779169/videos https://vimeo/user12779169/ * Freebox இல் TWITTER ஜ பார்வையிட : BALA87FR JaffnaBALA * Freebox இல் Google + ஜ பார்வையிட : Balasingam Balakrishnan Balasingam Sathasivam * - நன்றி, வணக்கம். யாழ் / நல்லூர் பா உ . பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ் * (- Nanri (y), Vanakkam. Yaal / Nallur B U . Bala - 87280 Limoges -> France )
Posted on: Thu, 08 Aug 2013 21:45:37 +0000

Trending Topics




© 2015