கேள்வி :- மீன் வளத் துறை அமைச்சராகத் தற்போது இருப்பவர் மீது வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தபோதும், வேட்பு மனு தாக்கல் செய்த நேரத்தில் அதை மறைத்து விட்டார் என்றும் ஜூ.வி. இதழ் விரிவாகச் செய்தி வெளியிட்டிருக்கிறதே? பதில் :- நாகப்பட்டினம் நகர போலீஸ் ஸ்டேஷனில் அந்த அமைச்சரின் பெயர் கேடி லிஸ்டில் இடம் பெற்றிருந்ததாகவும், பின்னர் நீதி மன்றத்துக்குச் சென்று அந்தப் பெயரை நீக்கி விட்டார் என்றும் அந்த இதழ் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அமைச்சரான பிறகும், காவல் நிலையத்தில் இருந்த வழக்கை அவரால் முடிக்க முடியவில்லை என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தன் துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பரிந்துரை காரணமாக பாஸ்போர்ட் வாங்கி, வெளிநாட்டிற்கும் இவர் சென்று வந்திருக்கிறார் என்றும் ஜூ.வி.யில் எழுதப்பட்டுள்ளது. வேட்பு மனுவை வழக்கறிஞர் பூர்த்தி செய்த காரணத் தால், அதில் குறிப்பிட்டிருந்த விவரங்களை அமைச்சர் கவனிக்கவில்லை என்று கூறியதாகவும் ஜூ.வி. இதழ் எழுதியிருக்கிறது. வேட்பு மனுவில் என்ன எழுதப்பட்டது என்பதைப் பார்க்காமல் அதிலே அமைச்சர் ஒருவர் கையெழுத்திட்டதாகக் கூறுவது எப்படிச் சரியாகும் என்பதற்கு அரசுதான் விளக்கம் கூறவேண்டும்!
Posted on: Thu, 28 Nov 2013 17:30:30 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015