இலட்சக்கணக்கான - TopicsExpress



          

இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற கொலைகாரனை, காமன்வெல்த் போட்டிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கொண்டு வந்து விருந்து வைத்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்த நேரத்தில் அவனை இங்கே அழைத்து வந்து பரிவட்டம் கட்டினாய். அவனை இங்கே அழைத்து வராதே என்றோம். அதையும் மீறி அழைத்து வந்தாய். 1200 தோழர்களோடு, மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய சாத்புரா மலைச் சரிவுகளிலே வந்து போராட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வந்தாய். திருப்பதி எங்கள் தமிழகத்தின் பூர்வீக மண். இந்தியாவுக்கு உள்ளே அவன் எங்கே வந்தாலும், டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகை இடுவோம் என்று அறிவித்து முற்றுகை இட்டோம். டெல்லிக்கு வராமல் கட்டாக் வழியாக பீகாருக்கும், திருப்பதிக்கும் அழைத்துக் கொண்டு போனாய். Read more at: tamil.oneindia.in/news/2013/06/25/tamilnadu-vaiko-warns-centre-over-training-sri-lanka-177875.html
Posted on: Tue, 25 Jun 2013 16:11:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015