சாதியும் சதியும் சாதி தமிழர்களின் கண்டுபிடிப்பு, எனவே அது நமது கலாச்சாரம் என்று கூறி ஒரு மாமேதை என்னிடம் இன்று காலை நீண்டநேரமாகப் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் தற்போது நடந்துகொண்டிருப்பது பெருஞ்சாதிகளின் மறுமலர்ச்சி என்கிறார் அவர். இதை பெருஞ்சாதிகளைச் சேராத அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் எதிர்ப்பார்களே ஒழிய இறுதியில் அதுதான் ஜெயிக்கப்போகிறது என்றும் அதை "சகித்துக்கொள்ளமுடியாவிட்டால" நீங்கள் எல்லாம் சீககிரம் புலம்பெயர்ந்த தமிழர்களாக ஆக நேரிடும் என்றும் கூறினார். தலித்துகள் "ஓவராக" போய்வி்ட்டார்களாம். வன்னியர், தேவர்களை விட ஒரு தலைமுறைக்கு முன்பே இடஒதுக்கீட்டை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதாலும் கிறிஸ்தவ நிறுவனங்களிடமிருந்து பால் பவுடர் வாங்கி சாப்பிட்டதாலும் இனி அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது என்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இடஒதுக்கீட்டால் வளர்ந்துவிட்டதால் அவர்களுக்கு இனி இடஒதுக்கீடு வேண்டாம் என்றார். சரி, இறுதியில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றேன். வன்னியர்களின் தலைமையில் வட தமிழகம், தேவர்களின் தலைமையில் தென் தமிழகம், கொங்கு வேளாளர்கள் தலைமையில் மேற்கு தமிழகம் என மூன்று மாநிலங்களாக பிரிவதுதான் நடக்கப்போகிறது என்றார். எனக்கு மூச்சுகூடவிடமுடியவில்லை. தமிழ்நாட்டின் மீதே ஏறி அதைக் கொன்றுவிட்டு செல்ல ஒரு ரயில் தயாராகிக்கொண்டிருக்கிறது. எனக்கென்னவோ இந்த ஜாதிவெறியர்களுக்குப் பின்னால் உளவு நிறுவனங்களின் சதி இருக்குமோ என்று தோன்றுகிறது. தமிழ் நாட்டில் தமிழ் அரசியல் முன்பு எப்போதையும்விட இப்போதுதான் மக்கள் மத்தியில் பரவுகிறது என்பதால் இதை முளையிலேயே கிள்ளிவிட ஏதாவது வேலை நடக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கையில் அது மத, மாகாண ரீதியில் நடந்தது. காஷ்மீரியத் மதத்தால் கொல்லப்பட்டது. தமிழ்நாட்டு தமிழ்த் தேசியம் சாதியத்தால்?...
Posted on: Sat, 13 Jul 2013 16:33:13 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015