பாகிஸ்தானைவிட இந்திய இராணுவம் பலம்வாய்ந்தது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் செளத்ரி அகமத் முக்தார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இராணுவ ரீதியாக பாகிஸ்தானை விட இந்தியா பலம் வாய்ந்த நாடு. இராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை. இந்தியா தற்போது பல அதிநவீன போர் கருவிகளை கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் பாகிஸ்தானை விட 6 முதல் 7 மடங்கு பெரியது.மேலும், வர்த்தக பரிமாற்ற அளவும் எங்களை விட 5 முதல் 6 மடங்கு பெரியதாகும். இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் தொடர்ச்சியாக 20 அல்லது 22 நாட்களுக்கு தான் பாகிஸ்தானால் தாக்கு பிடிக்க முடியும்.ஆனால், இந்தியாவால் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாக போரை நடத்த இயலும்.பாகிஸ்தானால் அவ்வளவு நாட்கள் தொடர்ந்து போர் புரிய முடியாது. இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.... அஷ்வின்
Posted on: Sun, 17 Nov 2013 06:47:33 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015