தெலுங்கானா அறிவிப்பு வந்ததும் தமிழகத்தில் ஆளாளுக்கு ஒரு மாநில பிரிவு செய்தி கொடுக்கிறார்கள். கவுண்டர்களுக்கு கோயம்புத்தூரை மையமாக வைத்து கொங்குநாடு வேண்டுமாம். வண்ணியர்களுக்கு வட தமிழ்நாடு. நாடார்களுக்கு, தேவர்களுக்கு தென் தமிழ்நாடு.... ஸ்.... அப்பாடா.... இப்பவே கண்ணை கட்டுதே.... பேசாம, ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு மாநிலமா ஆக்கிடல்லாம். தமிழ்நாட்டுல 30 முதல் மந்திரிங்க. கிட்டத்தட்ட 1000 மந்திரிங்க. 30 சட்டசபைகள். 30 தலைமை செயலர்கள். 10,000 கணக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். !!!!!!! ஒன்றியங்களையெல்லாம் மாவட்டங்களா ஆக்கிடலாம். வட்டச் செயலாளர் வண்டு முருகனெல்லாம் மா.செ. ஆகிடுவாங்க. அலப்பறை செய்யும் ஆணி புடுங்கிகள் எல்லாம் வெள்ளை கலர் ஸ்கார்ப்பியோவுல அங்கிட்டும் இங்கிட்டும் அலைவாங்க. சென்னையில அம்மாவுக்கு முன்னால 29 முதலமைச்சர்களும் முதுகு வளைத்து பவ்யமாக நிற்கும் காட்சியை பார்க்கும்போது...... யெலேய்... தமிழகம் எங்கோ போய்டும்ல
Posted on: Thu, 01 Aug 2013 04:50:22 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015