பள்ளியில் தலைமை ஆசிரியர் ‘உங்க பிள்ளை பொய் சொல்றான்... பீடி பழக்கம் வந்துருச்சு.... திருடவும் செய்யிறான்!... தயவு செய்து கண்டிச்சு வையுங்கள்.... இல்லாட்டி... சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துடுங்க....’ என்றார். அது பெரிய கட்சி. அந்த கட்சிக்கு வக்கீல்கள் அணி, மருத்துவர் அணி, முதலிய அணிகள் இருந்து அழகு செய்துவந்தன.... பள்ளியில் பயிலும் ”சிறார்கள் அணி” என்று ஒன்று இல்லை!! அக்கட்சியில் தொழிலாளர் அணியில் இருந்த தகப்பனார் பார்த்தார்... தம் பையனை ‘சிறார்கள் அணி’ யின் தலைவனாக்கிவிட்டார். அக்கட்சியின் தலைவர் தலைமை தாங்க... புது அணி உருவாக்கப்பட்டது.
Posted on: Wed, 28 Aug 2013 05:31:01 +0000