றிசாத் பதியுதீனின் - TopicsExpress



          

றிசாத் பதியுதீனின் வீட்டில் பொலிஸார் அதிரடி சோதனை. புத்தளத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் உம்மாவின் வீட்டிலும், மன்னார் மற்றும் வவுனியாவில் றிசாத் பதியுதீனின் வீட்டிலும் பொலிஸார் ஒரேதடவையில் அதிரடி சோதனைகளை மேற்கொண்ட விவகாரம் தற்போது முதற்தடவையாக வெளியே கசிந்துள்ளது. அரசியல் வட்டாரங்ளில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். யாருடைய உத்தரவின் பேரில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விபரம் வெளியாகவில்லை. அதேவேளை தன்னுடைய வீட்டில், தனது அனுமதியோ அல்லது நீதிமன்றத்தின் உத்தரவின்றியோ பொலிஸார் மேற்கொண்ட இச்சோதனை நடவடிக்கை குறித்து அமைச்சர் றிசாத் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இவற்றுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, றிசாத்தின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை குறித்து தான், பொலிஸ்மா அதிபரிடம் வினவுவதாக பதில் வழங்கியுள்ளார். முகநூல் வாயிலாக செய்திகளை உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள நமது Srilankan Muslim Nation பக்கத்தை லைக் செய்யுங்கள். Link: Srilankan Musilm Nation
Posted on: Sat, 24 Aug 2013 05:11:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015