ஒரு ஒயின் கடை முதலாளி சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது உயிலில், பல்வேறு வகையான சொத்துக்களையும் தனது மூன்று மகன்களுக்கு சரி சமமாக எழுதி வைத்திருந்தார்.எல்லாவற்றையும் பிரித்துக்கொண்டர்கள். கடைசியாக அவரது கடையில் இருந்த ஒயின் பீப்பாய்களையும் பிரித்துக்கொள்ள முடிவு செய்தார்கள். அங்கே மொத்தம் 21 பீப்பாய்கள் இருந்தன.அதில் ஏழு பீப்பாய்களில் முழுவதுமாக ஒயின் நிறப்பப்பட்டிருந்தது. மேலும் ஏழு பீப்பாய்களில் பாதிப் பீப்பாய் ஒயின் நிறப்பப்பட்டிருந்தது. ஏழு காலி பீப்பாய்களும் இருந்தன. அதனால், ஒவ்வொரு மகனுக்கும், சரிசமமாகப் பகிர்வது எப்படி என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டார்கள்.அதாவது மொத்தம் 21 பீப்பாய்களைப் பகிரும்போது, முழுதும் நிறப்பப்பட்ட பீப்பாய்கள், பாதி நிரப்பப்பட்ட பீப்பாய்கள், காலி பீப்பாய்கள் அனைத்தும், சரிசமமான எண்ணிக்கையில் பிரிக்கவேண்டும். அளந்து ஊற்றுவதற்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை.நீங்கள்தான் ஒரு யோசனை கூறுங்களேன். . . . . . . . . . . புதிர் விடை :--------------------->goo.gl/9637cV
Posted on: Thu, 26 Sep 2013 15:30:13 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015