கேரளாவில் மழைக்காலம் தொடங்குவதை நியூஸ் சேனல்களில் மகிழ்ச்சியாக வரவேற்றார்கள்.... கடைகளில் கலர் கலராய் குடைகள் விற்பதில் தொடங்கி... மழையில் கும்மாளமிடும் குழந்தைகள், ஒரே குடைக்குள் உரசியபடி செல்லும் கணவன், மனைவி.. பைக்கில் தன் துப்பட்டாவால் முன்னிருக்கும் ஆணை நனையாமல் பாதுகாக்கும் பெண் என அவ்வளவு ரசனையாய் இருந்தது அந்த காட்சிகள்... இன்று காலை.. இங்கு டிவி ஆன் செய்தால்... ‘’மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது... ‘’ என ஒரே புலம்பல்... ‘’ஒரே மழை.. ரோடெல்லாம் தண்ணி... எங்கியும் போக முடியலை... கஷ்டமா இருக்கு’’ என மைக் நீட்டப்பட்டவர்கள் எல்லாம் அழுது வடித்தார்கள்’’ எதற்கெடுத்தாலும் சலிப்பு :(.... மழை மட்டும் இல்லையென்றால் ஆளுக்கொரு ராக்கெட் விட்டிருப்பாங்க போல.... பாவம் மழைவந்து கெடுத்துடுச்சி :) :) :)
Posted on: Tue, 16 Jul 2013 04:25:52 +0000