அவுஸ்திரேலிய - TopicsExpress



          

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் இருவர் நாடுகடத்தப்படுகின்றனர்! (www:glowlinknews) நேற்று ஜானகி ஹோட்டலில் சுதந்திர ஊடக அமைப்பி னரால் ஊடக சவால்கள் எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள எந்த ஊடக நிறுவனத்திற்கும் அழைப்பு விடுக்காது, தனியே அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்தில் ஊடகவியலாளர்கள் என வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிலரை மாத்திரம் இணை த்துக் கொண்டு இச்செயலமர்வு இடம்பெற்றுள்ளது. இச்செயலமர்வில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜக்லீன் பாக் , ஜெனீ எனப்படுகின்ற இரு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவ்விடயத்தை அறிந்த குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினர் ஜானகி ஹோட்டலில் நேற்று 4 மணியளவில் சோதனை நடாத்தியபோது, மேற்படி இருவரும் ஊடகவியலாளர்கள் என்றும் அவர்கள் உல்லாசப் பயண அனுமதியை பெற்று (Tourist Visa)நாட்டினுள் நுழைந்து மேற்படி செயலில் இறங்கியிருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் இருவரையும் கைது செய்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினர் இவர்களை இன்று இரவு 8.30 மணியளவில் நாடுகடத்தவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் www:glowlinknews ற்கு தெரிவித்தார்.
Posted on: Thu, 31 Oct 2013 19:17:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015