நேத்து நைட் கண் முழிச்சி கஷ்டப்பட்டு ஒரு படம் பாத்தேன் … not bad…. but… அதுக்கப்புறம்தான் ப்ரச்சினையே…. நைட்டெல்லாம் ஒரே கெட்ட கனவு … (இல்ல…இல்ல…சூர்யா வந்து சவுண்டெல்லாம் குடுக்கலை..) ஆனா, ஒரே அடியாளுங்க தொல்லை.. ஒண்ணா ரெண்டா எத்தனை பெரு தெரியுமா ?? அத்தனை பேரும் என்னை துரத்தியிருந்தா பரவாயில்லை… தடியெடுத்து நாலு அடி அடிச்சிருந்தாலும் பரவாயில்லை….. ஆனா, அத்தனை பேரும் சொல்லி வெச்ச மாதிரி ‘அண்ணே…அண்ணே’ன்னு அட்வைஸ் கேக்கறாங்க……. என்னைப் பாத்து (?!?!?!) இல்ல தெரியாமதான் கேக்கறேன் என்னைப் பாத்தா அந்த அடியாளுங்களுக்கு அண்ணன் மாதிரியா இருக்கு ?!? அட் லீஸ்ட் அக்கா’ன்னாவது கூப்ட்ருக்கலாமில்ல !?! . . . இதுலெ ரொம்ப கொடுமையான விஷயம் என்னன்னா, அந்த மொட்டை வில்லன் சகாயம் கூட என்னை அண்ணேன்னு கூப்டுட்டாரு !!! அதான் தாங்க முடியல….ரொம்ப ஃபீலிங்சா போச்சுப்பா !!! . . நான் நினைக்கறேன் சூர்யாவுக்கு ஸ்பீக்கரையும் அந்த சகாயத்துக்கு ஸைலன்சரையும் தொண்டைல attach பண்ணியிருப்பாங்கன்னு !!!! :P :) . anyways, I like that movie & will watch it again.. later…. :)
Posted on: Sun, 25 Aug 2013 20:14:30 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015